May 6, 2025 - 04:56 PM -
0
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.
இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கல் பலவற்றில் மாலை 04 மணி வரையலான வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது.
4 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,
மன்னார் - 70%
திருகோணமலை - 67%
பொலன்னறுவை - 64%
அநுராதபுரம் - 64%
காலி - 63%
திகாமடுல்ல - 63%
மாத்தளை - 62%
மட்டக்களப்பு - 61%
மொனராகலை - 61%
களுத்துறை - 61%
வவுனியா - 60%
பதுளை - 60%
முல்லைத்தீவு - 60%
நுவரெலியா - 60%
முல்லைத்தீவு - 60%
இரத்தினபுரி- 60%
கிளிநொச்சி - 60%
கேகாலை - 58%
கண்டி – 58%
யாழ்ப்பாணம் - 57%
மாத்தறை- 58%
புத்தளம் - 55%
கொழும்பு- 52%
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.
2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமானது.
வாக்குப்பதிவு மாலை 4:00 மணி நிறைவடைந்த நிலையில், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
இந்த முறை தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் 8,287 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

