May 9, 2025 - 12:17 PM -
0
வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சி எழுச்சி பெற்றுள்ளது என்றால் அதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் காரணம் என உள்ளூராட்சி சபை தேர்தலில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முள்ளியவளை கிழக்கு வட்டாரத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அநுர அலை பாராளுமன்ற தேர்தலில் ஒரு சவாலை விடுத்து இருந்தாலும் இந்த தேர்தலில் தமிழரசு கட்சி ஓங்கி அறைந்து இருக்கிறது என தெரிவித்தார்.
--