May 9, 2025 - 08:14 PM -
0
பாகிஸ்தான் கிழக்கில் இந்தியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் சூழலில் மேற்கில் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானிடம் இருந்து தனி நாடு கோரும் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியாவின் தாக்குதலை சாதகமாகப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டா உட்பட பலுசிஸ்தான் முழுவதும் பல மூலோபாய இராணுவ நிலைகளை கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) கூறியுள்ளது.
இந்த உள்நாட்டு எழுச்சி பாகிஸ்தானின் அதிகரித்து வரும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கிறது.
அவர்களின் போராளிகள் கெச், மஸ்துங் மற்றும் கச்சி மாவட்டங்களில் ஆறு இடங்களில் ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்ட IEDகள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் கையெறி ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

