May 12, 2025 - 07:23 PM -
0
கொத்மலை, ரம்பொட, கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கொட்டகலை பொறஸ்ட்க்றீக் தோட்ட மக்கள் தங்களது கண்ணீர் அஞ்சலியினை இன்று (12) மாலை 5 மணியளவில் செலுத்தினர்.
குறித்த நிகழ்வினை அன்பே சிவம் அறநெறி பாடசாலை ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் உடல் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
--