May 18, 2025 - 03:34 PM -
0
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கான 16ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் இன்று (18) இடம்பெற்றது.
அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்த உறவுகளுக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டு, ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செய்யப்பட்டது.
--