May 18, 2025 - 03:44 PM -
0
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிக்கப்படாத இடத்தில் வேறு பகுதிக்கான அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி மணல் ஏற்றிச்சென்றமை, டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெயை பயன்படுத்தியமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமை ஆகிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மூன்று டிப்பர் வாகனங்கள் உட்பட அதன் சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
--