சினிமா
ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

May 22, 2025 - 01:06 PM -

0

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

 

டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடிகைகள், உட்பட கயாடு லோஹர், சம்பளமாக ரொக்கப் பணம் பெற்றதாகவும், இரவு விருந்துகளில் கலந்துகொண்டதற்காக 35 லட்சம் ரூபாய் வரை பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த விவகாரத்தில், ரத்தீஷ் நடத்திய இரவு நேர பார்ட்டியில் கயாடு கலந்துகொண்டதற்கு CCTV ஆதாரங்கள் அமலாக்கத்துறை (ED) வசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இவை தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு CCTV காட்சியில், பார்க்கவே சகிக்க முடியாத அரைகுறை ஆடையில் ஒரு பெண் காரில் இருந்து இறங்கி அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்வது போல் தோன்றுகிறது.

 

இது கயாடு லோஹர் என்று சிலர் கருதினாலும், அது அவர்தான் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இதே விவகாரத்தில், நடிகைகள் அஞ்சு குரியன், ஸ்ரீ கலா, தேஜு அஸ்வினி உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுவது, இந்த சர்ச்சையின் பரிமாணத்தை விரிவாக்கியுள்ளது.

 

இந்த பார்ட்டிகளில் கலந்துகொண்ட நடிகைகள் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும், மாறாக, ரத்தீஷின் அழைப்பிற்காக காத்திருந்ததாகவும், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், ஹேண்ட்பேக்குகள், வாசனைத் திரவியங்கள் போன்ற பரிசுப் பொருட்கள் லட்சக்கணக்கில் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த விவகாரம், சமூகத்தில் ஆழமான விவாதங்களை தூண்டியுள்ளது. ஒருபுறம், ஆயிரம் ரூபாய்க்காக வெயிலில் உழைக்கும் இளைஞர்களின் வாழ்க்கையும், மறுபுறம் ஒரு இரவுக்கு 35 லட்சம் பெறும் நடிகைகளின் வாழ்க்கையும் முரண்பாடாக உள்ளன.

 

இது, ஊழல், சினிமா, மற்றும் அரசியல் இடையேயான தொடர்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. கயாடு லோஹர், இதயம் முரளி, STR 49 உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், இந்த சர்ச்சை அவரது புகழுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

 

ரசிகர்கள், இந்த தகவல்கள் உண்மையாக இருக்கக் கூடாது என வேண்டிக்கொள்கின்றனர். இந்த விவகாரம், பெண்களின் உருவப்படுத்தல், தனிப்பட்ட சுதந்திரம், மற்றும் சமூக பொறுப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05