May 25, 2025 - 08:07 PM -
0
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இன்று (25) இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 67ஆவது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக டெவல்ட் பிரெவிஸ் 57 ஓட்டங்களையும் டிவொன் கொன்வே 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சில் பிரசித் கிரிஷ்ணா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 231 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக சாய் சுதர்ஷன் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் கம்போஜ் மற்றும் நூர் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

