May 26, 2025 - 05:47 PM -
0
பிரபல மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், Fine Time Cine யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய் குறித்து பரபரப்பான கருத்துகளைக் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, விஜய் தனது படங்கள் தோல்வியடைந்தால், அந்த தயாரிப்பாளருடன் மீண்டும் பணியாற்றுவதில்லையாம்.
மேலும், விஜய் ஒரு 'மனநோயாளி' என்று அவரது மகன் ஜேசன் சஞ்சய் நண்பர்களிடம் கூறியதாகவும்,
விஜய் தனது மனைவியை 'வீட்டு சிறையில்' வைத்திருப்பதாகவும், ஜேசன் தனது பெற்றோரை ஒன்றிணைக்க முயற்சித்து தோல்வியடைந்ததாகவும் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயின் ரசிகர்கள், எந்தவித ஆதாரமுமின்றி ஒரு பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மீது இப்படி பேசுவது தவறு என விமர்சித்துள்ளனர்.
அதேசமயம், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா பிரிந்து வாழ்வது உண்மையாக இருக்கலாம் எனவும், பாண்டியனின் கருத்துகளில் ஓரளவு உண்மை இருக்கக்கூடும் எனவும் சிலர் வாதிடுகின்றனர்.
இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தரப்பிலிருந்து இதுகுறித்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.