May 27, 2025 - 12:56 PM -
0
மராட்டிய மாநிலம் பீட்ஸ் மாவட்டத்திலுள்ள துலே – சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கெவ்ராய் நகரில் சொகுசு கார் ஒன்று வீதி தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது.
இதில், காரில் பயணம் செய்த 6 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
தொடர்ந்து, விபத்துக்குள்ளான காரில் இருந்த 6 பேரும் கீழே இறங்கினர். பின்னர், வீதி தடுப்பில் ஏறி நின்ற காரை அகற்றும் பணியில் 6 பேரும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லொரி மோதியதில் 6 பேரும் உயிரிழந்தனர்.
கார் விபத்தில் இருந்து தப்பியவர்கள் மீது லொரி மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.