May 28, 2025 - 05:27 PM -
0
கிரெடிட் கார்டுகள் இன்று மிகவும் சௌகரியமான ஒரு பொருளாதார கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரிவார்டுகளை சேகரிப்பதற்கும், அவசர சூழ்நிலையில் பணத்தேவையை சமாளிப்பதற்கும் இது பெரிதும் உதவுகிறது. ஆனால், கிரெடிட் கார்டை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் அதனால் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். எனவே, கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்வதற்கு முன்பு அதனால் விளையும் ஒரு சில பிரச்சனைகள் மற்றும் அதனை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சமாளிக்க முடியாத வட்டி விகிதங்கள்
பொதுவாக கிரெடிட் கார்டுக்கான வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும். இது ஆண்டுக்கு 18 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை வசூல் செய்யப்படுகிறது. ஆனால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் மொத்த பேலன்ஸ் தொகையையும் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது என்று சொல்லப்பட்டு விட்டதால் பலர் இதனை பின்பற்றுகின்றனர். ஆனால், இவ்வாறு செய்யும்போது உங்களுடைய வட்டி தொகையானது அதிகரிக்கும். ஆகவே, பேலன்ஸ் தொகை அதிகமாக அதிகமாக உங்கள் மீதான பொருளாதார சுமையும் அதிகரிக்கும். இது குறிப்பாக பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் ஆபத்தானதாக அமையலாம்.
என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு மாதமும் உங்களுடைய பேலன்ஸை முழுமையாக செலுத்துங்கள். அப்படி முடியாத பட்சத்தில் அதிக வட்டி விகிதம் கொண்ட கார்டுகளின் பேமெண்டுகளையாவது முதலில் செலுத்துங்கள்.
கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் ஓவர் டியூ பேமெண்ட்
ஒரே ஒரு பேமெண்டை நீங்கள் தவறவிட்டாலோ அல்லது தாமதமாக செலுத்தினாலோ, அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை குறைக்கலாம். இதனால் உங்களுக்கு பிற்காலத்தில் கடன்கள் வழங்கப்படுவதில் சிக்கல் உருவாகும். இந்த ஓவர் டியூ பேமெண்ட் என்பது உங்களுடைய பேமெண்ட் வரலாற்றில் 7 வருடங்கள் வரை நீடிக்கும்.
என்ன செய்ய வேண்டும்?
பேமெண்டை டியூ திகதிக்கு முன்பு செலுத்துவதை எளிமையாக்க ஆட்டோமேட்டிக் பேமெண்ட் அல்லது காலண்டரில் ரிமைண்டர்களை அமைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு பேமெண்டையும் செலுத்தாமல் இருப்பதற்கு குறைந்தபட்ச பேமெண்டையாவது செலுத்துவது நல்லது.
கடன் பயனீட்டு விகிதம்,
கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒரு பேமெண்டை செய்யும்போது அல்லது உங்களுக்கு வழங்கப்பட்ட கிரெடிட் லிமிட்டை அதிகபட்சமாக பயன்படுத்துவது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். நீங்கள் தொடர்ச்சியாக பேமெண்ட்களை செய்துவந்தால் கூட இது உங்களுக்கு கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
என்ன செய்ய வேண்டும்?
எனவே, எப்போதும் உங்களுடைய கிரெடிட் பயனீட்டு விகிதத்தை குறைவாக வைக்க வேண்டும். ஒருவேளை உங்களுடைய கிரெடிட் கார்டிற்கு 1 லட்சம் ரூபாய் லிமிட் வழங்கப்பட்டிருந்தால் முடிந்த அளவு நிலுவையில் உள்ள தொகையை 30,000 ரூபாய்க்கும் குறைவாக வைத்துக் கொள்வது நல்லது.
ரிவார்டுகளுக்காக அளவுக்கு அதிகமாக செலவு செய்தல்
கிரெடிட் கார்டுகள் மூலமாக செய்யப்படும் பேமெண்ட்களுக்கு கொடுக்கப்படும் ரிவார்டு பாயிண்டுகள் மற்றும் கேஷ்பேக் என்பது கிரெடிட் கார்டு ஹோல்டர்களை கவரக்கூடியதாக இருந்தாலும், இந்த ஆஃபர்களுக்காகவே பேமெண்ட்டுகளை செலுத்துவது முற்றிலும் தவறான ஒரு விஷயம். இது உங்களை அளவுக்கு அதிகமாக செலவு செய்ய வைத்துவிடும். சலுகைகள் அல்லது ரிவார்டுகளுக்காக பலர் கிரெடிட் கார்டுகளை அதிகமாக செலவு செய்வது ஆய்வு மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
உங்களுடைய கிரெடிட் கார்டை ஒரு டெபிட் கார்டு போல பயன்படுத்துங்கள். உங்களால் செலுத்த முடிந்த முழு தொகையை மட்டுமே செலவு செய்யவும்.
மறைமுக கட்டணங்கள்
பெரும்பாலான கிரெடிட் கார்டுகள் ஆண்டுவாரியான கட்டணம், தாமதமாக பேமெண்ட் செலுத்துவதற்கான கட்டணம், வெளிநாடுகளில் டிரான்சாக்ஷன் செய்வதற்கான கட்டணம், கொடுக்கப்பட்ட லிமிட்டை விட அதிகமாக செலவு செய்ததற்கான கட்டணம் என்று பல எதிர்பாராத கட்டணங்களை வசூல் செய்வார்கள். எனவே, உங்களுடைய கார்டு மூலமாக பெரும் நன்மைகளைவிட இந்த கட்டணங்கள் என்பது அதிகமாக இருக்கும்.
என்ன செய்ய வேண்டும்?
ஆகவே குறைவான கட்டணங்கள் மற்றும் தெளிவான நிபந்தனைகள் கொண்ட கார்டுகளை தேர்ந்தெடுப்பது அவசியம். உங்களுடைய பயன்பாட்டை வழக்கமான முறையில் கண்காணித்து, சரியான முறையில் செலவு செய்யுங்கள்.
இதற்காக கிரெடிட் கார்டுகள் ஒரு சாபம் என்று நம்மால் சொல்லிவிட முடியாது. இதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தும்போது, அதன் மூலமாக அதிகபட்ச பயன்களைப் பெறலாம். கிரெடிட் கார்டு பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் தனிநபர் ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்றி கிரெடிட் கார்டு வளைக்குள் மாட்டிக் கொள்ளாமல், உங்களுடைய பொருளாதார வாழ்க்கையை சுமூகமாக நடத்தலாம்.