May 28, 2025 - 05:55 PM -
0
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு மார்ச் முதல் மே இறுதி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க பலர் மலையேறுகிறார்கள். வருடந்தோறும் 6 முதல் 10 பேர் வரை உயிரிழப்புச் சம்பவம் நடக்கிறது.
இந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் இருந்து பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, மே 31 வரை அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வனத்துறையினர் முன்கூட்டியே மலையேற்றத்திற்கான அனுமதியை ரத்து செய்துள்ளனர். இதுவரை ஏழு பேர், அதில் பாடசாலை மாணவர் உட்பட உயிரிழந்துள்ளனர்.
வனத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுவாசப் பிரச்சனை, இருதய கோளாறு, நுரையீரல் பிரச்சனைகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மலையேறக்கூடாது என்று எச்சரிக்கின்றனர். ஆறு மற்றும் ஏழாவது மலையில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால், அந்த பிரச்சனை உள்ளவர்கள் மலையேறும்போது உயிரிழக்கின்றனர்.
சமூக ஆர்வலர் ராஜேந்திரன் தெரிவிக்கையில்,
'வெளிமாவட்ட பக்தர்களுக்கு மலையின் சூழல் குறித்து விழிப்புணர்வு இல்லை. படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்காக மலையேறுகின்றனர். அதிகாரிகள் இதை கண்காணிக்க வேண்டும்' என்று கூறினார்.
பக்தர் ஒருவர் தெரிவிக்கையில்,
'ஒவ்வொரு மலைக்கும் சிரமம் உள்ளது. ஆறு மற்றும் ஏழாவது மலைகளில் ஆக்சிஜன் குறைவாக உள்ளது. ஐந்து, ஆறாவது மலைகளில் வலுவான பாறைகள் உள்ளன. மழை நேரங்களில் வனவிலங்குகள் வர வாய்ப்பு அதிகம். இதனாலே மலையேறும் பக்தர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
5,500 அடி உயரத்தில் உள்ள சுயமலிங்கத்தை தரிசிக்கும்போது, மேலே வீசும் காற்று மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, முதலாவது மலையிலும் அடிவாரத்திலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பக்தர்கள் இதனை கண்டு கொள்ளாமல் உயிரிழக்கின்றனர். இனி வனத்துறையினர் கடுமையாக தணிக்கை செய்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
மருத்துவர் ஹரி பரசாத் தெரிவிக்கையில்,
'உயர் அழுத்தம், இருதய கோளாறு, சக்கரை வியாதி, உடல் பருமன் உள்ளவர்கள் மலையேறக்கூடாது. மலையேறும்போது உடல் பரிசோதனை செய்துகொண்டு மலையேற வேண்டும். விலங்குகள் இருக்கக்கூடிய இடமாக இருப்பதால் விஷ பாம்பு மற்றும் பூச்சிகளால் ஆபத்து ஏற்படலாம்.
மலையேறும் முன் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு, மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மலையேற வேண்டும். இதை கடைபிடித்தால் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்' என தெரிவித்தனர்.