May 29, 2025 - 04:26 PM -
0
யாழ்ப்பாணம் - மண்டைதீவில் கடற்படையினரால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு வேலுசுமன கடற்படை முகாம் கட்டளை அதிகாரியின் ஏற்பாட்டில் இன்று (29) காலை இடம்பெற்றது.
மே 18 ஆம் திகதி உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் முதன்மை நோக்கத்துடன் இவ்வாறு மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.
இதன்போது முந்திரி செடிகள் மற்றும் தென்னங்கன்றுகள் என்பன நாட்டப்பட்டன.
குறித்த நிகழ்வில் மண்டைதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார் மற்றும் கடற்படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
--