May 29, 2025 - 06:25 PM -
0
கலாச்சாரத்தை மதிக்கும் பண்பு மற்றும் சமூகத்தின் மீதான அக்கறை ஆகியவற்றை இதயசுத்தியுடன் வெளிக்காண்பிக்கும் வகையில், அண்மையில் இடம்பெற்ற கண்டி புனித தந்த தாது வழிபாட்டு நிகழ்வின் போது 20,000 க்கும் மேற்பட்ட யாத்திரிகர்களுக்கு DFCC வங்கி உதவிகளை வழங்கியுள்ளது.
இம்முயற்சியை வங்கியின் கண்டி பிராந்திய அலுவலகம் முன்னெடுத்துள்ளதுடன், ஊழியர்கள் மற்றும் வங்கியின் கூட்டுப் பங்களிப்புக்களுடன், பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்களும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்கியுள்ளதுடன், அதன் பின்னர் சூழலைச் சுத்தப்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க முயற்சியொன்றையும் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் இடம்பெறுகின்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சமய மற்றும் கலாச்சார அனுட்டானங்களில் ஒன்றாகக் காணப்படும் புனித தந்த தாது வழிபாட்டு நிகழ்வானது, நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்களை ஈர்க்கின்றது. தாங்க முடியாத வெப்பநிலை சூழல் மற்றும் யாத்திரையின் போது மிக நீண்ட தூர வரிசைகளில் காத்திருந்த யாத்திரிகர்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை DFCC வங்கி வழங்கி அவர்களுக்கு மிகவும் தேவையான ஆறுதலை வழங்கியுள்ளதுடன், யாத்திரிகர்கள் தமது ஆன்மீக பயணத்தை சௌகரியம் மற்றும் பாதுகாப்புடன் தொடர்ந்தும் மேற்கொள்ள இடமளித்துள்ளது.
நிகழ்வு இடம்பெற்றதைத் தொடர்ந்து அப்பிரதேசத்தை முழுமையாக சுத்தப்படுத்தும் முயற்சியாக, தனது பரந்த நிலைபேற்றியல் நிகழ்ச்சிநிரலின் கீழ் பணியாளர்களின் தன்னார்வப்பணியை DFCC வங்கி ஏற்பாடு செய்துள்ளது. புனித பிரதேசத்தைச் சூழவுள்ள இடங்களை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கு இம்முயற்சி உதவியுள்ளதுடன், சூழல் மீதான பொறுப்புணர்வு மற்றும் குடிமக்கள் மீதான கௌரவம் ஆகியவற்றின் வங்கியின் அர்ப்பணிப்பை இது பிரதிபலித்துள்ளது.
சமூகத்தின் மீதான பொறுப்புணர்வு மற்றும் கலாச்சாரத்தைப் பேணிப் பாதுகாப்பதில் முன்னிலை வகிபாகம் ஆகியவற்றின் மீது வங்கி கொண்டுள்ள பரந்த கவனத்தின் அங்கமாக இந்த அர்த்தமுள்ள பங்களிப்பு அமையப்பெற்றுள்ளது. உள்ளுர் சமூகங்களுக்கு வலுவூட்டுவதிலும் சரி, சூழலைப் பாதுகாப்பதில் முன்னின்று செயற்படுவதிலும் சரி, அல்லது தேசியரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியங்களுக்கு ஆதரவளிப்பதிலும் சரி, இன்னும் கூடுதலான அளவில் அனைவரையும் உள்ளடக்குகின்ற, மரியாதை செலுத்துகின்ற மற்றும் நிலைபேணத்தக்க இலங்கையைக் கட்டியெழுப்புதில் DFCC வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.