May 29, 2025 - 07:04 PM -
0
நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2 ஆவது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் இன்று (29) மோதுகிறது.
நாளை (30) நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் குஜராத், மும்பை அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி பஞ்சாப்பின் முல்லன்பூரில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி ஆர்சிபி அணி பெற்ற முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதோடு, தோல்வியை சந்திக்கும் அணி இரண்டாவது குவாலிபையர் சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.