செய்திகள்
கொழும்பில் முறிந்து விழுந்த மரங்கள்

May 30, 2025 - 08:00 AM -

0

கொழும்பில் முறிந்து விழுந்த மரங்கள்

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (30) இரவு வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பு - காலி வீதியில் கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலும், கிரேண்ட்பாஸ் பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் விழுந்து கிடப்பதைக் காணமுடிகிறது. 

கிரேண்ட்பாஸ் புனித ஜோசப் வீதியில் பெரிய அளவிலான மரம் ஒன்று விழுந்ததால், அருகில் இருந்த 6 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05