விளையாட்டு
பஞ்சாப் - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

Jun 1, 2025 - 01:02 PM -

0

பஞ்சாப் - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமாகியது. குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

 

30 ஆம் திகதி நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.

 

இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று (01) தெரியும்.

 

அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் - ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

இதில் வெற்றி பெறும் அணி 2 ஆவது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப்பா, மும்பையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த 26 ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். அதே நேரத்தில் பஞ்சாப் அணி குவாலிபையர் 1 போட்டியில் பெங்களூரு அணியிடம் 101 ஓட்டங்களில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.

 

மும்பை இந்தியன்ஸ் வலுவாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது பஞ்சாப்புக்கு சவாலானதே. 2 ஆவது முறையாக பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதற்கு முன் 2014 இல் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

 

Comments
0

MOST READ