Jun 2, 2025 - 10:21 PM -
0
இந்தியாவில் நடைபெறவிருக்கும் 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான திகதிகள் மற்றும் இடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் என எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டி செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.
அதன்படி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி சர்வதேச மைதானம், குவஹாத்தியில் உள்ள ஏசிஏ சர்வதேச மைதானம், இந்தூரில் உள்ள ஹோல்கர் சர்வதேச மைதானம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ சர்வதேச மைதானம் மற்றும் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம் ஆகிய இடங்களில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.
12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டி சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தான் அணியின் தகுதிச் சுற்று நிலையைப் பொறுத்து, முதல் அரையிறுதிப் போட்டி ஒக்டோபர் 29-ம் திகதி குவஹாத்தி அல்லது கொழும்பில் நடைபெறும். 2-வது நாக் அவுட் ஆட்டம் மறுநாள் ஒக்டோபர் 30-ம் திகதி பெங்களூருவில் நடைபெறும். நவம்பர் 2 ஆம் திகதி பெங்களூருவில் இறுதிப் போட்டி நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அது கொழும்பில் நடைபெறும்.