Header Logo

மலையகம்
26 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கத் தடை

Jun 3, 2025 - 11:31 AM -

0

26 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கத் தடை

ஹட்டன் பொது பஸ்தரிப்பு நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் திடீர் சோதனைக்குற்படுத்தப்பட்டது.

 

நுவரெலியா மாவட்ட மோட்டர் வாகன பிரதான பரிசோதகர் சாலிய பண்டார மற்றும் ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையில் நேற்று (02) மாலை ஈடுபட்டனர்.

 

திடீர் பரிசோதனையின் போது 28 அரச மற்றும் தனியார் பேருந்துகள் சோதனையிட்ட போது 13 இ.போ.ச பேருந்துகளும் 13 தனியார் பேருந்துகள் பல்வேறு குறைபாடுகளுடன் சேவையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

 

குறைபாடுகள் அடையாளம் கானப்பட்ட 26  பேருந்துகள் எதிர்வரும் 14 நாட்களுக்குள் திருத்தியமைத்து மோட்டார் வாகன பரிசோதகரிடம் காட்டியதன் பின்னர் மீண்டும் சேவையில் ஈடுபட முடியும்.

 

பயணிகளின் பாதுகப்பு நலன் கருதி மேலும்  நுவரெலியா மாவட்டத்தில்  பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபம் அனைத்து பேருந்துகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் மோட்டார் வாகன பரிசோதகர் சாலிய பண்டார தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!