Jun 3, 2025 - 11:42 AM -
0
இனுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு பின் வீதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 2 போதை மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
இதனையடுத்து குறித்த இளைஞருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
--