Jun 4, 2025 - 03:35 PM




“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரண்டு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (04) பாராளுமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
"இலங்கை மின்சாரம் (திருத்தம்)" சட்டமூலம் தொடர்பாக, அரசியலமைப்பின் பிரிவு 121 (1) இன் படி உயர் நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.























