Jun 6, 2025 - 10:49 AM -
0
பாராளுமன்ற அலுவல்கள் இன்று (6) ஆரம்பித்த போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இதனை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதன்படி, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்கவுக்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கருத்தில் கொண்டு, கடந்த மே 20 ஆம் திகதி இந்த மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவின் தலைவராக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர பணியாற்றுகிறார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றைய உறுப்பினராக உள்ளார்.