Jun 6, 2025 - 12:13 PM -
0
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (05) இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவை கோரியிருந்ததாக குறிப்பிட்டார்.
அதன் பின்னர் கருத்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை, கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
--