Jun 8, 2025 - 05:09 PM -
0
பொசன் நிகழ்வை முன்னிட்டு, அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலையை முன்னிலைப்படுத்தி பல விசேட போக்குவரத்து திட்டங்களை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விசேட போக்குவரத்து திட்டம் நாளை (08) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
அதன்படி, அனுராதபுரம் புனித பூமி மற்றும் மிஹிந்தலை புனித பூமிக்குள் பின்வரும் இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் சாரதிகள் தங்கள் வாகனங்களை குறித்த இடங்களில் தரித்து வைக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.



