வடக்கு
ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

Jun 9, 2025 - 09:34 AM -

0

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று (08) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திறுவையாறு பகுதியில் நள்ளிரவு 11.20 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

இதன்போது, சந்தேக நபரின் வீட்டு வளாகத்தில் கைவிடப்பட்ட சாக்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 31 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று (09) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05