செய்திகள்
பெண்ணின் உயிரை காப்பாற்றிய பொலிஸார்

Jun 10, 2025 - 09:37 AM -

0

பெண்ணின் உயிரை காப்பாற்றிய பொலிஸார்

அனுராதபுரம், மல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகிலுள்ள குளியல் தளத்தில் குளித்துக் கொண்டிருந்த 54 வயது பெண்ணொருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகளால் நேற்று (09) மாலை மீட்கப்பட்டார். 

நேற்று (09) மாலை அந்தப் பெண் இந்த விபத்தை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

அப்போது பணியில் இருந்த உயிர்காக்கும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மிகுந்த முயற்சியுடன் அவரை மீட்டு அடிப்படை சிகிச்சை அளித்தனர். 

பாதிக்கப்பட்டவர் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவராவார். 

இந்தப் பெண், பொலிஸ் சார்ஜென்ட் 66640 ரஞ்சித், பொலிஸ் கான்ஸ்டபிள் 76785 நிஷாந்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 93809 லியனகே ஆகியோரால் காப்பாற்றப்பட்டுள்ளார். 

அந்தப் பெண் மீட்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு அடிப்படை முதலுதவி அளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05