Header Logo

சினிமா
சின்மயி விஷயத்தில் கொந்தளித்த கங்கை அமரன்

Jun 10, 2025 - 06:19 PM -

0

சின்மயி விஷயத்தில் கொந்தளித்த கங்கை அமரன்

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் பல பாடல்களை பாடி அசத்தி வந்தவர் பின்னணி பாடகி சின்மயி. வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை முன்வைத்த சின்மயியை பாடல் பாடக்கூடாது என்று ரெட் கார்ட் போடப்பட்டது. அதன்பின் தமிழில் பாடாமல் இருந்த சின்மயிக்கு லியோ படத்தில் திரிஷா குரலுக்கு டப் கொடுத்திருந்தார்.

 

தடைகளை மீறி லோகேஷ் கனகராஜ் இதை செய்திருந்தார். இதனைதொடர்ந்து தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடலை ஆடியோ லான்ச்சில் ஏ ஆர் ரஹ்மான், சின்மயியை பாட வைத்தார். அவர் பாடியது மிகப்பெரியளவில் டிரெண்டாகிய நிலையில், இணையம் முழுவதும் சின்மயி பற்றிய பேச்சுக்கள் எழுந்தது.

 

சமீபத்தில் சின்மயிக்கு ஆதவராக இசையமைப்பாளர் கங்கை அமரன் பேட்டியொன்றில் பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், சின்மயிக்கு ஒரு ரசிகர்கள் சந்திப்பு நடத்துகிறார்கள் என்று சொன்னதும் நிச்சயம் வருகிறேன் என்று கலந்து கொண்டேன்.

 

ஏனென்றால் சின்மயி ஒரு பாடகியாக பட்ட கஷ்டம், அதன்பின் நடந்த அசிங்கம், அந்த அசிங்கத்தை வெளியே சொன்னதும் அவர் உத்தமன் மாதிரியும் இவர் குற்றவாளியாக நின்ற அசிங்கமான சூழலில் நாம் நின்றோம். அப்போது அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை. அநியாயத்தை கேட்க ஒரு பெண் நிற்கிறார், அவருக்கு ஆதரவு கொடுக்க நான் ரெடி.

 

வைரமுத்து ஒரு தங்கமான ஆள், யாரையும் தப்பா முகத்தை பார்த்து பழகுனது கிடையது.

 

அப்படிப்பட்ட ஆள் மேல நீ குத்தம் சொல்லலாம். அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்று அழகாக எழுதியவர். அவர் எவ்வளவு உத்தமமான ஆள். அவர் ஒரு அதிசயப்பிறவி. அவரைப்பற்றி அவரே சொல்லிக்கொள்வார்.

 

வைரமுத்து ஒரு நல்ல கவிஞர் என்று உண்மையாக ஒத்துக்கொள்கிறேன், ஆனால் நல்ல மனிதன் இல்லை. வைரமுத்து பற்றி பேசினால் என்னை கைது செய்துவிடுவார்களா? இந்நிகழ்ச்சிக்கு பின் முதல்வர் வீட்டுக்குத்தான் போரேன் என்று கங்கை அமரன் கூறியிருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title