Header Logo
Mogo Academy

ஏனையவை
ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் மொபைல் தூதரக சேவை!

Jun 11, 2025 - 11:35 AM -

0

ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் மொபைல் தூதரக சேவை!
Mobitel inner

அஷிகாகா-தொச்சிகி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் இலங்கை சமூக மக்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கில், ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் அஷிகாகாவில் மொபைல் தூதரக சேவை ஒன்று நடாத்தப்பட்டது. 

இந்த நிகழ்வின் போது, தூதரக அதிகாரிகள் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், வாகன ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், சத்தியப் பிரகடனம் வழங்கல், அதிகாரப்பூர்வ ஆவணங்களை சான்றளித்தல் உள்ளிட்ட முக்கிய தூதரக சேவைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த பெருந்தொகையான இலங்கை மக்கள் பங்கேற்று சேவைகள் பெற்றுக்கொண்டனர். 

இந்த மொபைல் தூதரக சேவை, தொச்சிகி ஓஹனா அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வெசாக் மற்றும் பொசோன் பண்டிகை கொண்டாட்டமான “வெசாக் வலயம்” நிகழ்வுடன் இணைந்தே நடாத்தப்பட்டது. அழகாக அலங்கரிக்கப்பட்ட 600 க்கும் அதிக வெசாக் விளக்குகளும், இலங்கை பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் கொண்ட இந்த வெசாக் வலயம், ஜப்பான் மற்றும் இலங்கை மக்களுக்கு இலங்கை கலாச்சார அனுபவத்தை வழங்கும் வாய்ப்பாக அமைந்தது. 

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற சிறுவர் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பிள்ளைகளுக்கு, அவர்களது படைப்பாற்றல் மற்றும் பங்கேற்பை பாராட்டி மதிப்பிற்குரிய பாடசாலை பை பரிசாக வழங்கப்பட்டது. 

ஜப்பானுக்கான இலங்கைத் தூதர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க, இந்த வெசாக் வலயம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சி, ஜப்பானிய நாட்டினருக்கும் ஜப்பானில் வசிக்கும் இலங்கைச் சிறுவர்களுக்கும் இலங்கையின் வெசாக்கின் கலாச்சார அம்சங்களை அறிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியதாகக் கூறினார். 

டோச்சிகி பரமிதா தியான மையத்தின் தலைவர் அதி வணக்கத்திற்குரிய மாவதரே சந்திம தேரர், சைதம குமகாய ஆனந்தமெத் விஹாரையின் தலைவர் அதி வணக்கத்திற்குரிய நராவில விஜயவன்ச தேரர் மற்றும் மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் மத விழாக்களில் பங்கேற்றனர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara