Jun 11, 2025 - 06:42 PM -
0
கொத்மலை, ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (11) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான (NC-1144) பேருந்து, கடந்த 11ஆம் திகதி அதிகாலை 4.45 மணியளவில் நுவரெலியா-கண்டி வீதியில் உள்ள கெரண்டிஎல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்ததோடு, 60 பேர் காயமடைந்தனர்.