Jun 11, 2025 - 11:31 PM -
0
தெல்லிப்பளை வைத்தியசாலை கடந்த இரண்டு வருடங்களாக வினைத்திறனற்ற வைத்தியசாலை நிர்வாகியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக பல்வேறு நிர்வாகச் சிக்கல்களைச் சந்தித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பற்ற நிலைக்கும் தற்போதைய நிர்வாகம் இட்டுச் செல்கின்றது . இது தொடர்பாக மாகாண மற்றும் மத்திய சுகாதார உயர் மட்டங்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். ஆனால் இன்று வரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை எனவும் அந்த சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையை கீழே காணலாம்.
--