வடக்கு
போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

Jun 14, 2025 - 12:48 PM -

0

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05