Jun 16, 2025 - 03:16 PM -
0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் அமைச்சுக்கு சொந்தமான பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில் 16 சொகுசு வாகனங்கள், ஏனைய வாகனங்கள் 3 மற்றும் பழைய வாகனங்கள் 3 உள்ளடங்குவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை பிரஜைகள் அல்லது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த விலைமனு கோரலில் பங்கேற்க தகுதியுடையவர்கள் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையர்கள் தங்கள் அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட நகலையும், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளைப் பொறுத்தவரை விலைமனு கோரல்களை சமர்ப்பிக்கும் போது பதிவுச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகலையும் இணைக்க வேண்டும்.
அதன்படி, ஆர்வமுள்ள விலைமனுதாரர்கள் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், சிரேஷ்ட உதவிச் செயலாளர் (நிர்வாகம்) அல்லது போக்குவரத்து அலுவலரை 0112186076 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 2025 ஜூன் 16ஆம் திகதி முதல் 2025 ஜூலை 07ஆம் திகதி வரை அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை வாகனங்களை ஆய்வு செய்யலாம் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.