விளையாட்டு
களத்தில் எங்களுக்கு இடையேயான சண்டையை மிஸ் செய்வேன்

Jun 18, 2025 - 09:29 PM -

0

களத்தில் எங்களுக்கு இடையேயான சண்டையை மிஸ் செய்வேன்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தார். அவரை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான முதல் டெஸ்ட் நாளை மறுநாள் (20) லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் விராட் கோலியை போட்டியாளராக நினைத்ததில்லை என இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது, "விராட் கோலியை நான் எப்போதுமே போட்டியாளராக நினைத்ததில்லை. அவரை பார்த்து வியந்துள்ளேன். களத்தில் எங்களுக்கு இடையே இருக்கும் சண்டையை நான் எப்போதுமே மிஸ் செய்வேன். ஆனால் சிலரின் ஓய்வு சிலருக்கு வாய்ப்புகளை கொடுக்கும்" என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05