Header Logo

கிழக்கு
கதிர்காமத்திற்கான பாதயாத்திரை - காட்டு வழிப்பாதை திறப்பு

Jun 20, 2025 - 03:48 PM -

0

கதிர்காமத்திற்கான பாதயாத்திரை - காட்டு வழிப்பாதை திறப்பு

கதிர்காம முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தைக் காண பக்தர்கள் இன்று (20) காலை காட்டுப்பாதை வழியாகப் பாதயாத்திரையை மேற்கொண்டனர். 

பக்தர்களுக்காக லாகுகலை உகந்தை வனப் பாதையின் நுழைவாயில், உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று காலை 6.00 மணியளவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டது. 

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

‘ஆரோஹரா’ கோஷத்துடன் பக்தர்கள் தங்களது காட்டுவழிப் பயணத்தை இன்று ஆரம்பித்தனர். 

மேலும், எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கதிர்காம உற்சவம் ஜூலை 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும். 

அத்துடன், இன்று திறக்கப்பட்ட கதிர்காம காட்டுப்பாதை எதிர்வரும் 2025 ஜூலை 4ஆம் திகதி மூடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title