Header Logo

கிழக்கு
கதிர்காமத்திற்கான பாதயாத்திரை - காட்டு வழிப்பாதை திறப்பு

Jun 20, 2025 - 03:48 PM -

0

கதிர்காமத்திற்கான பாதயாத்திரை - காட்டு வழிப்பாதை திறப்பு

கதிர்காம முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தைக் காண பக்தர்கள் இன்று (20) காலை காட்டுப்பாதை வழியாகப் பாதயாத்திரையை மேற்கொண்டனர். 

பக்தர்களுக்காக லாகுகலை உகந்தை வனப் பாதையின் நுழைவாயில், உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று காலை 6.00 மணியளவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டது. 

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

‘ஆரோஹரா’ கோஷத்துடன் பக்தர்கள் தங்களது காட்டுவழிப் பயணத்தை இன்று ஆரம்பித்தனர். 

மேலும், எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கதிர்காம உற்சவம் ஜூலை 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும். 

அத்துடன், இன்று திறக்கப்பட்ட கதிர்காம காட்டுப்பாதை எதிர்வரும் 2025 ஜூலை 4ஆம் திகதி மூடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title