செய்திகள்
திபெத்தில் நிலநடுக்கம் : ரிக்டரில் 4.2 ஆக பதிவு

Jun 22, 2025 - 11:47 PM -

0

திபெத்தில் நிலநடுக்கம் : ரிக்டரில் 4.2 ஆக பதிவு

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான திபெத்தில் இன்று (22) இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.22 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 

திபெத் இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஜனவரி மாதம் 7ஆம் திகதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05