Jun 23, 2025 - 01:03 PM -
0
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையை அடுத்து, ஸ்ரீகாந்த் காவலில் எடுக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீகாந்த் பல வெற்றி படங்களில் நடித்து, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
அவரது கைது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், போதைப்பொருள் தொடர்பான வழக்கில் அவர் மீது சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது.
மருத்துவ பரிசோதனை முடிவுகள், அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துமா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இது குறித்து விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.