Header Logo

மலையகம்
விபத்தை தடுத்த புகையிரத சாரதி

Jun 23, 2025 - 02:39 PM -

0

விபத்தை தடுத்த புகையிரத சாரதி

கலபட மற்றும் வட்டவளை இடையிலான புகையிரதப் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டன. இருப்பினும், புகையிரத சாரதியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

மலைப்பகுதிகளில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, நேற்று (22) இரவு சுமார் 7.50 மணியளவில் கலபட மற்றும் வட்டவளை இடையிலான புகையிரதப் பாதையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால், மதியம் 12:45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயாவுக்கு புறப்பட்ட புகையிரதம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகியது.

 

புகையிரதப் பாதையில் மரம் விழுந்ததைக் கண்ட சாரதி, சாமர்த்தியமாக புகையிரதத்தை உடனடியாக நிறுத்தி விபத்தைத் தடுத்தார். பின்னர், சாரதியின் வழிகாட்டுதலின்படி, பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்கள் இணைந்து பாதையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

 

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு புகையிரதம் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக நாவலப்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!