Header Logo

மலையகம்
விபத்தை தடுத்த புகையிரத சாரதி

Jun 23, 2025 - 02:39 PM -

0

விபத்தை தடுத்த புகையிரத சாரதி

கலபட மற்றும் வட்டவளை இடையிலான புகையிரதப் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டன. இருப்பினும், புகையிரத சாரதியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

மலைப்பகுதிகளில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, நேற்று (22) இரவு சுமார் 7.50 மணியளவில் கலபட மற்றும் வட்டவளை இடையிலான புகையிரதப் பாதையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால், மதியம் 12:45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயாவுக்கு புறப்பட்ட புகையிரதம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகியது.

 

புகையிரதப் பாதையில் மரம் விழுந்ததைக் கண்ட சாரதி, சாமர்த்தியமாக புகையிரதத்தை உடனடியாக நிறுத்தி விபத்தைத் தடுத்தார். பின்னர், சாரதியின் வழிகாட்டுதலின்படி, பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்கள் இணைந்து பாதையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

 

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு புகையிரதம் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக நாவலப்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title