Jun 25, 2025 - 01:04 PM -
0
சிம்பு, தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி ஆண்டுகள் கடந்து விட்டன. எஸ்டிஆரின் 48வது படமாக தயாராகும் என கூறப்பட்ட நிலையில், பட்ஜெட் காரணமாக திட்டமிட்டப்படி இப்படம் துவங்கவில்லை. இதனையடுத்து சிம்புவின் 50 ஆவது படமாக தேசிங்கு பெரியசாமி இதனை இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் இப்படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தான் தனது 50 ஆவது படம் உருவாக வேண்டும் என்பதில் சிம்பு உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்டிஆரின் ஐம்பதாவது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக சில நாட்களாக இணையத்தில் செய்திகள் வெளியான நிலையில், இதனை சிம்பு தரப்பு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது 50 ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி தான் இயக்குவார் என்பதையும் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது கதையின் மீது அபாரமான நம்பிக்கை வைத்துள்ள சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தை அவரே தயாரிக்க இருக்கிறார். பேண்டஸி ஜானரில் உருவாகவுள்ள இப்படம் பாகுபலி அளவுக்கு இருக்கும் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன. இதனாலே தேசிங்கு பெரியசாமி படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் சிம்பு.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான தேசிங்கு பெரியசாமி, தனது முதல் படத்திலே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். இதனையடுத்து தனது இரண்டாவது படத்தை இயக்குவதற்காக நீண்ட காலமாக காத்திருப்பில் இருக்கிறார். பட்ஜெட் காரணமாக தொடர்ந்து இப்படம் தள்ளிப்போனாலும், அவரது கதை குறித்து திரையுலகை சார்ந்தவர்களே வியப்பாக பேசி வருகின்றனர்.
எஸ்டிஆர் 50 படத்தில் சிம்பு இரண்டு விதமான ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று திருநங்கை கலந்த கதாபாத்திரம் என கூறப்படுகிறது. இதனிடையில் மணிகண்டன் நடிப்பில் தேசிங்கு பெரியசாமி படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன. சிறிய பட்ஜெட்டில் மிகக்குறுகிய காலத்தில் இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மணிகண்டன் படத்தை முடித்ததை தொடர்ந்து எஸ்டிஆர் 50 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜுன் 5 ஆம் திகதி மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தில் சிம்பு முக்கியமான ரோலில் நடித்தார். அவரது கதாபாத்திரம் படத்துக்கு மிகப்பெரிய பாசிட்டிவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தக் லைஃப்பை தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க துவங்கியுள்ளார் சிம்பு. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களமாக இப்படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.
சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளனர். தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னைக்கும், இப்படத்துக்கும் தொடர்பு இருக்கும் என கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக சமீபத்தில் ப்ரொமோ வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டது.
இதற்கான படப்பிடிப்பு பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பங்கேற்றார். அவரும் இந்த ப்ரொமோவில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ப்ரொமோ மீது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.