Header Logo

வணிகம்
செலிங்கோ லைஃப் குடும்ப சவாரி 18 இனை காப்புறுதிதாரர்களின் குடும்பங்களுக்கான கண்கவர் மலேசியாவுக்கான சுற்றுப்பயணத்துடன் நிறைவு செய்தது

Jun 26, 2025 - 01:43 PM -

0

செலிங்கோ லைஃப் குடும்ப சவாரி 18 இனை காப்புறுதிதாரர்களின் குடும்பங்களுக்கான கண்கவர் மலேசியாவுக்கான சுற்றுப்பயணத்துடன் நிறைவு செய்தது

செலிங்கோ லைஃப் நிறுவனமானது அண்மையில் குடும்ப சவாரி வெகுமதி திட்டத்தின் 18வது பதிப்பை அதன் காப்புறுதிதாரர் வெற்றியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்ற நிலையில் மலேசியாவிற்கு வழங்கிய விடுமுறை சுற்றுப்பயணத்துடன் பூர்த்தி செய்தது. 

இதற்கிணங்க ஜூன் 13 முதல் 16 வரை, 10 காப்புறுதிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக மொத்தம் 40 பேருக்கு மூன்று இரவுகளுடன் நான்கு நாட்கள் மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த சுற்றுப்பயணத்தில் குடும்ப சவாரி ஊக்குவிப்பு திட்டத்தின் பிரபல தூதுவர்களான ரோஷன் ரணவான, அவரது மனைவி குஷ்லானி மற்றும் அவர்களின் மகன் மின்னெத் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் சுற்றுலாக்களுக்கான அனைத்து செலவுகளையும் செலிங்கோ லைஃப் ஏற்றுக்கொண்டது. பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள், லேக் சிம்பொனி லைட் மற்றும் வோட்டர் ஷோ, கேஎல்சிசி மீன் காட்சியகம், கேபிள் கார் சவாரிகளுடன் கூடிய அழகிய ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் மற்றும் ஆன்மீக பத்து குகைகள் போன்ற புகழ்பெற்ற இடங்களைப் பார்வையிடுவதற்கான பயணத் திட்டம் என்பன இந்த சுற்றுப் பயணத்தில் இடம்பெற்றது. குடும்பங்கள் ஒன்றாகக் கொண்டாடுவதற்கான பிரத்தியேக இரவு விருந்துபசாரத்துடன் இந்த சுற்றுப்பயணம் முடிவடைந்தது. 

இந்த மலேசியாவுக்கான சுற்றுப் பயணம், மொத்தம் 265 காப்புறுதிதாரர் குடும்பங்களுக்கு வெகுமதி அளித்த குடும்ப சவாரி 18 இன் வெற்றிகரமான முடிவைக் குறிக்கிறது. இந்த வெகுமதிகளில், மலேசிய சுற்றுப்பயணத்துடன் பண்டாரகமவின் பேர்ல் பே நீர் பூங்காவில் 250 குடும்பங்கள் ஒரு நாளினை மகிழ்ச்சிகரமாக கழிக்க வழங்கப்பட்ட வாய்ப்பு மற்றும் ஐந்து குடும்பங்களுக்கு சீனாவின் ஷாங்காய் நகருக்கு சுற்றுலா வாய்ப்பு ஆகியவை அடங்கும். இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த திட்டமாக செலிங்கோ லைஃப்பின் குடும்ப சவாரி தொடர்ந்து உள்ளது. எமது காப்புறுதிதாரர்களுக்கு இந்த மறக்க முடியாத குடும்ப அனுபவங்களை வெகுமதி அளிப்பதில் நாம் மிகவும் பெருமைப்படுகிறோம், என்று செலிங்கோ லைஃப் பணிப்பாளர்ஃ பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. சமித ஹேமச்சந்திர கூறினார். குடும்ப சவாரி என்பது உள்நாட்டு சுற்றுலாக்கள் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் வரை, விசுவாசத்தைக் கொண்டாடுவது மற்றும் பிணைப்புகளை வலுப்படுத்துவது பற்றியதாக திகழ்கிறது. 

2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக வாக்களித்தது, தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம் என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது. செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 21 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title