Jun 26, 2025 - 02:08 PM -
0
பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவு குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில் இருந்த கைதி ஒருவர், இன்று (26) பிற்பகல் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த வேளையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த கைதி பிம்சாரா அமல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

