Header Logo

கிழக்கு
நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்

Jul 1, 2025 - 10:36 AM -

0

நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்

முன்னாள் அமைச்சர், மூத்த அரசியல் தலைவர் காமினி லொக்குகே மறைந்த செய்தி அறிந்து மிகக் கவலையடைந்தேன். அரசியல் ரீதியில் உயர் பதவிகளை வகித்த அவர் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

 

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் மறைவு குறித்து வெளியிட்ட அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே  எனது நெருக்கமான நண்பர், நீண்டகாலமாக என்னோடு அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுபட்டவர், எப்போது எந்த தேவைக்கு போனாலும் பண்பாக பேசக்கூடியவர். அதேபோன்று அவருடைய பிரதேசம், தொகுதி மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.

 

அவர் சமூகத்திற்கும் நாட்டிற்கும் செய்த மகத்தான சேவைகள் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

 

காமினி லொக்குகே அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என அவரது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title