Header Logo

கிழக்கு
திடீரென உடைந்த பாலம் - தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து

Jul 2, 2025 - 07:20 PM -

0

திடீரென உடைந்த பாலம் -  தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கோயில்வாடி மீன்பிடித் துறைமுகத்திற்கு செல்லும் பாலத்தின் வழியாக மினி லாரி ஒன்று தண்ணீர், மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் சென்றபோது, பாலம் இடிந்து வீழ்ந்ததால் லாரி கடலுக்குள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இதில் இருவர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் இன்று (02) காலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கடலுக்கு நடுவே அமைந்த இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளதால், புதிய பாலம் அமைக்க வேண்டுமென மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இன்று காலை, வழக்கம்போல் மீனவர்கள் மீன்பிடிக்கத் தயாராக, ஐஸ், மீன்பிடி வலை, உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை லாரியில் ஏற்றிச் சென்றபோது, பாலம் பாரத்தைத் தாங்காமல் உடைந்து, லாரி கடலுக்குள் விழுந்தது.

 

இதில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் படுகாயமடைந்தபோதும், தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.மீனவர்களும் பொலிஸாரும் இணைந்து காயமடைந்தவர்களையும் லாரியையும் மீட்டனர். இதனால், மீன்பிடி படகுகளுக்கு தேவையான உபகரணங்களைக் கொண்டு செல்ல முடியாமல் மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title