சினிமா
வெளியான பரபரப்பு தகவல்கள்!

Jul 7, 2025 - 10:18 AM -

0

வெளியான பரபரப்பு தகவல்கள்!

பிரபல மலையாள, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்பட நடிகையான ஷகிலா, ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பழைய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்தப் பேட்டியில், அவர் தனது இளவயது அனுபவம் ஒன்றை உருக்கமாக பகிர்ந்துள்ளார். ஷகிலா தெரிவிக்கையில், 

 

நான் மிகவும் இளமையாக இருந்தபோது, ஒரு ஆண் நண்பரால் கர்ப்பமானேன். ஆனால், எனக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக இல்லாததால், ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே மாதவிடாய் ஏற்படும். இதனால், நான் கர்ப்பமாக இருப்பது எனக்கு தெரியவில்லை.

 

ஒரு நாள், என் அம்மா என் வயிற்றை தொட்டு பார்த்து, நீ கர்ப்பமாக இருக்கிறாய் என கூறினார், என்று தெரிவித்தார்.

 

உடனே, நான் என்னுடைய திருமணம் எப்போது? எங்கே திருமணம் செய்வது? என்ற யோசனைக்கு சென்று விட்டேன். ஆனால், அந்த நேரத்தில், தான் மிகவும் இளவயதினராக இருந்ததால், குழந்தையை வைத்திருப்பது சரியாக இருக்காது என அவரது தாய் முடிவு செய்து கருக்கலைப்பு செய்ததாக ஷகிலா கூறினார்.

 

'அந்த முடிவு சரியானது என்று இப்போது நினைக்கிறேன். ஏனெனில், அந்தக் குழந்தை பிறந்திருந்தால், அது முறையற்ற குழந்தையாகவே கருதப்பட்டிருக்கும்,' என்று அவர் குறிப்பிட்டார்.

 

மேலும், அந்த ஆண் நண்பருடன் இன்னும் தொடர்பில் இருப்பதாகவும், தனது தவறு இருந்தபோதிலும், தனது தாய் தன்னை தண்டிக்காமல் அல்லது திட்டாமல் ஆதரவாக இருந்ததாகவும் உருக்கமாக பேசினார்.

 

ஷகிலா, 1990களில் மலையாள சாஃப்ட்கோர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். அவரது இந்த பேட்டி, அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட உணர்ச்சிகரமான அனுபவங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் ஷகிலாவின் வெளிப்படையான பேச்சை பாராட்ட, மற்றவர்கள் இது சர்ச்சைக்குரியதாக கருதுகின்றனர்.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05