Header Logo
Mogo Academy

ஏனையவை
‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – Movie Club, மட்டக்களப்பு

Jul 7, 2025 - 03:36 PM -

0

‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – Movie Club, மட்டக்களப்பு
Mobitel inner

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, மட்டக்களப்பிலுள்ள ‘Movie Club’ இன் ஒழுங்கமைப்பில் 21.06.2025 அன்று, சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் ‘American Corner’ இல் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். 

இத்திரையிடலில் பங்குபற்றியிருந்த பார்வையாளர்களில் ஒருவரான கேஷாயினி எட்மண்ட், “இது காலத்தின் தேவை கருதியதொரு ஆவணப்படம். இதன் காட்சியமைப்புகள் எனக்குப் பிடித்திருந்தன. குறித்த விடயம்சார் நூலினை எழுதியவரது நேர்காணலை உள்ளடக்கியிருந்தது மிகவும் வரவேற்கத்தக்கது. பலரும் இப்போது சுற்றாடல்சார் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனஞ்செலுத்த ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” எனவும், “ஆவணப்படத்தின் நேரத்தினைச் சுருக்குவது, சுவாரசியமாக்குவது, தொழில்நுட்பத் தரம் போன்றன குறித்தும் சிந்திக்க வேண்டும். பெண்களது நேர்காணல்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.” எனவும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். 

வடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும், கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara