Header Logo

செய்திகள்
உயரமான பகுதிகளுக்கு பவுசர் மூலம் நீர் விநியோகம்

Jul 12, 2025 - 03:58 PM -

0

உயரமான பகுதிகளுக்கு பவுசர் மூலம் நீர் விநியோகம்

தற்போதைய வறட்சியான வானிலை காரணமாக உயரமான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்கள் இருந்தால், பவுசர்களைப் பயன்படுத்தி குடிநீர் விநியோகிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் மிகவும் வறட்சியான வானிலை காரணமாக, நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் வஜிரா திராணகம தெரிவித்தார். 

அதன்படி, வாகனம் கழுவுதல், தோட்டக்கலை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு குடிநீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டும் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது முகாமையாளர், பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார். 

"மழைப்பொழிவு குறைந்து, அதிக வெப்பநிலை நிலவுவதால், மக்களின் நீர் நுகர்வு வேகமாக அதிகரித்து வருகிறது. 

இருப்பினும், நீர் வழங்கல் சபையின் உற்பத்தி நடவடிக்கைகள் முன்பை விட அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. 

எங்கள் பிற நிறுவனங்களுடன் இணைந்து சுத்தமான நீர் முகாமைத்துவத்தை உறுதி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம், அதேநேரத்தில் மக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இதற்கமைய எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்க்கலாம். 

ஒருவேளை உயரமான பகுதிகளுக்கு தண்ணீர் வராமல் போகலாம். 

எங்கள் நீர் கோபுரங்களில் நீர் மட்டம் குறையும் போது இந்த நிலைமை ஏற்படலாம். 

இருப்பினும், உயரமான பகுதிகளுக்கு நீர் வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். 

நாங்கள் பவுசர்களைப் பயன்படுத்தி இந்தப் பணியைச் செய்கிறோம்." என்றார்.


MOST READ

காணொளி
படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

title