Jul 13, 2025 - 03:36 PM -
0
ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பதில் மேலதிக நீதவான் இலக்கம் 7 முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கார் விபத்து இடம்பெற்றதன் பின்னர், வேறொரு குழுவுடன் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் இன்று வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

