சினிமா
உயர் நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

Jul 15, 2025 - 06:07 PM -

0

உயர் நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

தமிழ் சினிமாவில் படங்கள் நடிப்பது, அவரது வாழ்க்கையை கவனிப்பது என இருந்தவர் நடிகர் ரவி மோகன். ஆனால் கடந்த சில வருடங்களாக ரவி மோகன் பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது.

 

தற்போது, இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

அதுமட்டுமின்றி, தற்போது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் மூலம் ப்ரோகோடு (Brocode) என்ற படத்தை தயாரிக்க இருக்கிறாராம்.

 

இந்நிலையில், 2 படங்களில் நடிக்க நடிகர் ரவி மோகனுடன் கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அதற்காக அவர் ரூ.6 கோடி முன்பணம் வாங்கியதாகவும், ஆனால், ஒப்பந்தப்படி தங்களது நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவன படங்களில் நடித்ததால், இது குறித்து மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது.

 

தற்போது மனு குறித்து நடிகர் ரவி மோகன் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூலை 23 ஆம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளார்.    
 

Comments
0

MOST READ
01
02
03
04
05