Header Logo

செய்திகள்
ரயிலில் மோதி காட்டு யானை பலி

Jul 18, 2025 - 12:23 PM -

0

ரயிலில் மோதி காட்டு யானை பலி

 

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று (18) அதிகாலை காட்டு யானை ஒன்று மோதியுள்ளது. 

கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அந்த யானை உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள நெல் களஞ்சியசாலைகளை உடைத்து அவற்றினுள் நுழைந்து நெல்லை உணவாக உட்கொள்வதாகவும், இன்று அதிகாலை 3.00 மணி முதலே காட்டு யானை கிராமத்தில் சுற்றித் திரிந்ததாகவும் பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார். 

காட்டு யானை கிராமத்திற்குள் நுழைந்த போது வனவிலங்குத் திணைக்களத்திற்கு தகவல் வழங்க கிராம மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதிகாரிகள் தொலைபேசி இணைப்பை துண்டித்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

காட்டு யானை கிராமத்திற்கு அடிக்கடி வருவதாகவும், வனவிலங்குத் திணைக்களம் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற ஒரு துயரம் நிகழ்ந்திருக்காது என்றும் கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இவ்வாறு இறந்த காட்டு யானை சுமார் 15 வயதான 8 அடி உயரமானது என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

title