Header Logo

மலையகம்
நுவரெலியா மற்றும் நானுஓயாவில் கடும் பனி மூட்டம்

Jul 20, 2025 - 11:41 AM -

0

நுவரெலியா மற்றும் நானுஓயாவில் கடும் பனி மூட்டம்

நுவரெலியா மாவட்டத்தில் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையை தொடர்ந்து நானுஓயா பகுதியில் கடுமையான பனி மூட்டத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

 

இன்று (20) காலை முதல் நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் புகைபோல் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன சாரதிகள் கடும் அவதி அடைந்து வருகின்றன. பிரதான வீதிகளின் பயணிக்கும் வாகனங்கள் மெதுவாகவும், முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

குறிப்பாக நுவரெலியா, லபுக்கலை, குடாஓயா, மார்காஸ் தோட்டம், உலக முடிவு பிரதான வீதி, நானுஓயா, நானுஓயா புகையிரத நிலையம், ரதல்ல குறுக்கு வீதி, டெஸ்போட், கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் பனி மூட்டத்தின் தாக்கம் புகைபோல் நீடித்து வருகிறது இதனால் குறித்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரதான வீதியே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி மூட்டம் காட்சி அளித்து வருகிறது எனவும் ஓரளவு மழை ஓய்ந்தாலும் பனியின் தாக்கமும், கடும் குளிரும் குறையவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

பலத்த மழை காற்று மற்றும் பனி மூட்டத்தினால் ஏற்படும் அனர்த்தங்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!