Jul 20, 2025 - 04:13 PM -
0
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையே சந்திப்பு திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (20) இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கிழக்கு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பல்லேகும்புர மற்றும் 22 ஆவது காலாட்படை பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் பெரேரா கலந்துகொண்டு திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு விஷயங்களில் இராணுவத்தின் ஈடுபாடு மற்றும் பொதுமக்களுடனான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
--